ஐசியூவில் திருமணம்!! உயிருக்கு போராட்டமான நிலையிலும் நெகிழ்ச்சி!!

 
தாய்மகள்


தாய்மகளின் பாசப்பிணைப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதனை பல சம்பவங்கள்  நமக்கு உணர்த்தி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகாரில்  பாட்னா மாவட்டத்தில் பாலி கிராமத்தில் வசித்து வருபவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இவர்களின் மகள் சாந்தினி குமாரி . கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். 

ஐசியூவில் திருமணம்
நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.  இதனையடுத்து  அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் அவரின் உடல் நிலை மிக மோசமான நிலையை எட்டி விட்டதாகவும்,  எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனை கேட்ட பூனம் வர்மா தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்



இந்நிலையில் சாந்தினி குமாரிக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண்முன்னே திருமணம் நடைபெற்றது. திருமணத்தை பார்த்த கையோடு  சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா உயிரிழந்து விட்டார். உயிர் போகும் நிலையிலும் மகளின் திருமணத்தை கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற தந்தையின் பாசத்தை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கண்கலங்கினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web