அடுத்த வாரம் கல்யாணம்.. தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!

 
கிறிஸ்டில்லா

கல்யாணத்துக்கு இன்னும் முழுசா ஒரு வாரம் கூட கிடையாது. ஊரெல்லாம் பத்திரிக்கை அடிச்சு, கல்யாணத்துக்கு அழைத்தாயிற்று. சொந்த, பந்தமெல்லாம் ரெண்டு, மூணு நாள்ல வீடு  முழுக்க நிரம்பி இருக்கும் என கல்யாண வேலைகளில் முழு மூச்சாக மூழ்கியிருந்த குடும்பத்துக்கு பேரிடியாக விடிந்தது அன்றைய பொழுது.

கல்யாணமாகி, புகுந்த வீட்டுக்குப் போகப்போற பொண்ணு.. எந்நேரமும் செல்போனையே நோண்டிக்கிட்டு இருக்க.. ஒழுங்க சமையல் எல்லாம் கத்துக்க என்று தாய் திட்டியதால், அசட்டுத்தனமாக தற்கொலைச் செய்து கொண்டார் கிறிஸ்டில்லா மேரி. வாழ வேண்டிய 19 வயசு இளம்பெண். கல்யாணம் குறித்து அந்த பெண் கண்ட கனவுகள் எல்லாம் கனவாகவே போயிற்று. 

திருநெல்வேலி மாவட்டம் மூனைஞ்சிபட்டி அருகே உள்ள கீழகோடன் குளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் குப்புராஜ். இவரது மனைவி கனகமணி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். குப்புராஜ் ஏற்கனவே இறந்த நிலையில் அவரது மகளான கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமண நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 1ம் தேதி திருமணம் நடத்த, அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

poison

இந்நிலையில் கிறிஸ்டிலா மேரி வீட்டு வேலை செய்யாமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சமையல் வேலைகளைக் கற்றுக் கொள் என தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனடைந்த கிறிஸ்டில்லா மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனால் மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Moolakaraipatti PS

இது குறித்து அவரது அண்ணன் முத்தமிழ் பீட்டர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web