மாஸ் வீடியோ!! ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்!!
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது ஆன்றோர் வாக்கு. இன்றைய இளைய தலைமுறையில் இந்த திருமணத்தை கேலிக்கூத்தாக நடத்தப்பட்டு வருவது கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் அக்லூஜின் மல்சிராஸ் தாலுகாவில் வசித்து வரும் தொழிலதிபர் அதுல். இவர் மும்பையில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்டார்.
ஒரே நபரை கரம் பிடித்த இரட்டை சகோதரிகள்!! pic.twitter.com/7FP6KkqbJl
— Dina Maalai (@DinaMaalai) December 4, 2022
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரே இளைஞர் 2 பேரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும் இது குறித்து ராகுல் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். . அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மணமகன் மற்றும் 2 மணமகள்களின் திருமணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் ”ரிங்கி மற்றும் பிங்கியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அதுல் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொண்டது சகோதரிகள் இருவர் மனதிலும் அன்பை உருவாக்கி விட்டது. அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதன்படி திருமணம் செய்து கொண்டதாகவும் , மூவரும் இணைந்து வாழத் தயாராக இருக்கிறோம் என விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், திருமண சட்டங்களின்படி குற்றமே.” மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!