பாஜக எம்.எல்.ஏ., பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி முக்தா திலக் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!

 
முக்தா திலக்

பாஜக எம்.எல்.ஏ.வும், பால கங்காதர திலகரின் கொள்ளு பேத்தியுமான முக்தா திலக், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்தா திலக், மகராஷ்டிரா சட்டசபைக்கு புனே நகரின் கஸ்பா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான முக்தா திலக் (57) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமானது. 10 நாட்களுக்கு முன்பு புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

Mukta-thilak

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகலில்அவர் உயிரிழந்தார். மரணம் அடைந்த முக்தா திலக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும், அதற்காக சிசிச்சை பெற்றுக் கொண்டே கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல் முறை எம்.எல்.ஏ.வான இவர், புனே நகர மேயர் பதவியையும் வகித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். முக்தா திலக்கிற்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நாக்பூரில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பெண் எம்.எல்.ஏ. ஒருவர் மரணம் அடைந்த தகவல் சட்டசபையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சட்டசபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. முக்தா திலக்கின் மறைவு பேரிழப்பு என்று தனது இரங்கல் செய்தியில்,பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web