புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை!!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அத்துடன் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யலாம். டிசம்பர் 4ம் தேதி தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!