தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!
பிரபல முண்ணனி மலையாள இயக்குனர்களில் ஒருவர் கே.பி.சஷி. இவருக்கு வயது 64. இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான கே.தாமோதரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ல் வெளிவந்த ‘இலையும், முள்ளும்’ படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர். இதுதவிர இவர் பல ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் படிக்கும் போதே கார்ட்டூன் துறையில் பணியாற்றியவர். மேலும் 2003ல் வெளியான 'ஏக் அலக் மௌசம்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதே போல் பல்வேறு மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.பி.சஷியின் மரணம் மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!