புத்தாண்டு பரிசு! கக்கனின் பேத்தி உட்பட 45 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! பணியிட மாற்றம்! திருச்சிக்கு புதிய காவல் ஆணையர்!

 
சத்ய ப்ரியா

கடந்த இரு தினங்களுக்கு  முன்பாக (டிசம்பர் 30ம் தேதி) தான் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. அது குறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்த பொழுது அடுத்த பட்டியலும் தயார் என நம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த நிலையில் புத்தாண்டு பரிசாக அதிரடியாக இன்று 45 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

சத்யப்ரியா டிஜிபி ஐஜி

அருண், கல்பனா நாயக், ஈஸ்வரமூர்த்தி, அவிபிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி, ஆகிய ஐந்து பேருக்கு ஏடிஜிபி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஏடிஜிபி வன்னியப்பெருமாள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பிரவின் குமார் அபினபு, நரேந்திரன் நாயர், ரூபேஸ் குமார் மீனா, சத்யபிரியா, விஜயேந்திர பிதாரி ஆகியோர் ஐவருக்கு டி.ஐ.ஜிக்களில் இருந்து ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

திருச்சி

இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் 34 நபர்கள் புதிய இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் விபரம் விஜயகுமார் , திஷா மிட்டல், துரை, மகேஷ், அபினவ் குமார், சிபி சக்ரவர்த்தி, ஜியா உல் ஹக், விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜயலெட்சுமி , மூர்த்தி, ஜெயச்சந்திரன், மனோகர், தர்மராஜன், சாம்ரத் லோகன் ராஜேந்திரா, ராஜேஸ்வரி, மயில்வாகன், ராஜேந்திரன், சியாமளாதேவி, மணி, மோகன்ராஜ், ஸ்ரீனிவாச பெருமாள், சாய் பிரணித், செந்தில் குமார், அதிவீரபாண்டியன், ரோகித் மாதன் ராஜகோபால், மீனா, ஆதர்ஷ் பச்சாரா, பாஸ்கரன் ஆகிய 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர துணை ஆணையராக பணியாற்றியவர் மீண்டும் ஆணையாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் கக்கனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web