வர்ற திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை! சண்டிகர் மாநில அரசு அறிவிப்பு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

வர்ற திங்கட்கிழமை நவம்பர் 28ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது அரசு விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறையும் விடப்படும். அந்த வகையில் சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழா நடைபெறும் நாட்களில் அந்த பகுதியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.

விடுமுறை

இந்நிலையில் இனி வரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை விடப்படும் என சண்டிகர் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 28ம் தேதி திங்கட்கிழமையன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கார்ப்பரேஷன்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது.

விடுமுறை
2022ல் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் சண்டிகர் யூனியன் பிரதேச விடுமுறை குறித்து  டிசம்பர் 15, 2021ல் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் நிர்வாகம் ஒரு பகுதி மாற்றத்தை செய்துள்ளது. எனவே, குரு தேக் பகதூர் தியாகி தினம் இனி அனைத்து நிறுவனங்களிலும் அனுசரிக்கப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web