அட!! கடலுக்கடியில் கட் அவுட்!! கலக்கும் மெஸ்ஸி ரசிகர்கள்!!
சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகின்றன. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகின்றன. சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கு நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, லட்சத்தீவு ரசிகர் ஒருவர் கடலுக்கடியில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்துள்ளார். இந்த கட் அவுட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் களம் இறங்கிய போதே ரசிகர் முகமது ஸ்வாதிக், தனது சமூக வலைதளத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றால் மெஸ்ஸிக்கு கடலடியில் கட்-அவுட் வைப்பேன் என உறுதி அளித்திருந்தார். சொன்னபடி தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் கேரளாவில் தான் கால்பந்துக்கு ரசிகர்கள் அதிகம். ஏற்கனவே கேரள ரசிகர்கள் ஆற்றில் தங்களது பிடித்த வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, மற்றும் நெய்மர் ஆகியோருக்கு கட் அவுட் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!