அம்மாடியோ..வ்!! ரூ320கோடி!! சபரிமலை வரலாறு காணாத வசூல் சாதனை !!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக 48 நாட்கள்  நடைதிறக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19 இன்று இரவு  நடை சாத்தப்படும் நிலையில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவு அதாவது ரூ320 கோடி வருமானம் வந்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை ஆதலால் தினமும் சுமார் 2லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை

ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்புக்கள் மட்டும் தான் சபரிமலை சன்னிதானம் திறக்கப்படும். கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் மகரஜோதி தரிசனம் வரை தொடர்ந்து நடை திறக்கப்பட்டிருக்கும்.  தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நவம்பர் 16ம் தேதியன்று இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது.  தினசரி  அதிகாலை நடை திறக்கப்படுவது முதல் இரவு கோவில் நடை அடைக்கப்படுவது வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பதினெட்டாம் படியேறி சபரிமலை ஐயப்பனை தரிசத்தனர். முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  விடாத மழை,  கொட்டும்  பனி என்றும் பாராமல் ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் வரை தரிசனம் செய்து வந்தனர்.

சபரிமலை கோயில் வருமானம் 9 மடங்கு அதிகரிப்பு..!
டிசம்பர் 28ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டு, பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி பூஜை, மகரவிளக்கு பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.   இன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு சீசனில் ரூ.320 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன் 2018-ம் ஆண்டு ஐயப்ப சீசனின் போது ரூ.260 கோடி வசூல் ஆனதே அதிகபட்ச வருமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web