பெற்றோர்களே மிஸ் பண்ணீடாதீங்க!! ஜனவரி 4 ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!!
ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு ஆண்டு தோறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது.
பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டில் நாளை மறுநாள் ஜனவரி 4ம் தேதி புதன் கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்த சுற்றறிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்திய அளவில் சுகாதார திட்டங்களை முதலில் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் தான் முன்னோடியாக திகழ்கிறது.
தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மீண்டும் 9வது மற்றும் 12 வது மாதங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஜனவரி 4ம் தேதி புதன்கிழமை முதல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து தகுதியான குழந்தைகளுக்கு வழங்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர்கள் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலர்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!