பொங்கல் வைக்க உகந்த நேரம், வழிபாட்டு முறை , பலன்கள்!! முழு தகவல்கள்!!

 
பொங்கல்

நாளை தை மாதம் முதல் நாள்  அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை.  உத்திரயாண புண்ணிய காலம் ஆரம்பிக்கும் நாள். அறிவியல் ரீதியாக மழையும், பனியும் முடிந்து கோடையை வரவேற்கும் மாதம் . நமது உணவிற்கான விளைச்சலை நல்லபடியாய் கொடுத்த சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள். 

பொங்கல்
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எப்படி?


இன்றே வீடு வாசல் சுத்தம் செய்து தலைவாசலில் காப்பு கட்ட வேண்டும்.  பொங்கல் இடத் தொடங்கும் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து நல்லபடியாக பொங்கல் பண்டிகை கொண்டாட சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இஞ்சி, மஞ்சள் கொத்து வைத்து பொங்கல் பானையில் கட்ட வேண்டும். பொங்கல் பானையைக் கிழக்கு நோக்கி வைத்து, அதை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்துகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரையலாம்.  அதன் பிறகே  அடுப்பில் ஏற்றிப் பொங்கல் வைக்க தொடங்க வேண்டும். தற்போது வீட்டுக்கு உள்ளே சமையல் அறையில் கேஸ் ஸ்டவில் பொங்கல் வைக்கின்றனர்.  பொங்கல் எப்படி வைத்தாலும் சூரிய ஒளி விடும் இடத்தில் தான் படையல் இட வேண்டும். படையல் இடும் இடத்தில்  சூரிய சந்திரர்களை வரைந்து  கொள்ள வேண்டும். நாளைய தினம் குறைந்தது 11 முறை சூர்ய காயத்ரி மந்திரத்தை சொல்வது சிறப்பு. 

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல்
நாளை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  தை முதல் நாள் பொங்கல்பண்டிகை . இந்நாளில்  காலை 7.30 மணி முதல் 8.30க்குள் பொங்கல் வைக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் 7 மணி முதல் 8 மணி வரை சுக்கிர ஹோரை. 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஹோரை.  2  ஹோரைகளும் சேர்ந்தார்ப்போல 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். சுக்கிரன் அருளால் சுகமான வாழ்வும்,  புதபகவானின் அருளால் அறிவும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு பெறலாம்.  இயலாதவர்கள் காலை  11 மணி முதல் -12 மணி வரை குருஹோரையிலும் பொங்கல் வைக்கலாம்.  குருஹோரையில் செய்தால் பொன்பொருள் சேர்க்கை, தானிய சேர்க்கை  அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பொங்கல்பானையில் பொங்கி வழியும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று மங்கல முழக்கம் இட வேண்டும்.  வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, ' பொங்கலோ பொங்கல்' என்று சத்தம் எழுப்புதல் வீட்டிற்குள்  நேர்மறையான அதிர்வுகளை அதிகரிக்க செய்யும். நல்ல சிந்தனைகள் சேரும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web