வரலாற்றில் உச்சம்! தங்கம் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

வரலாற்றில் உச்சமாக ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5055க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு நாள் தங்கத்தின் விலை குறைந்தாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை இரட்டிப்பாக அதிகரித்து விடுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதனால் தங்கத்தின் விலை ரூ5000க்கும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசு தனிதான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்களிடையே தங்கம் மிகப்பெரிய சேமிப்பாகவே இருந்து வருகிறது. நேற்றைய விலை நிலவரப்படி சென்னையில்,  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,047க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.40,376க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம்
நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5055க்கும், சவரனுக்கு ரூ.64 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.40,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.00 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.73,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web