பெற்றோருக்கு தண்ட செலவு... உருக்கமாக கடிதம் எழுதி +1 மாணவி தற்கொலை!

 
திவ்யதர்ஷினி

என்னால பெற்றோர்களுக்கு வருஷா வருஷம் தண்ட செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று தனது தோழிகளிடம் புலம்பி வந்தவள், அதையே உருக்கமான கடிதமாக எழுதி வைத்து விட்டு, சேலம் சித்தூர் கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமம், வெற்றிலைகாரன் காடு பகுதியில் வசித்து வருபவர் மணி என்கிற மெய்யப்பன். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் திவ்யதர்ஷினி (17). இவர் சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் திவ்யதர்ஷினிக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால் அவரது பெற்றோர்களால் கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த நிலையில், மூத்த மகள் மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தன்னால் மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், எனக்கு பின்னால் உள்ள தம்பி, தங்கையை காப்பாற்ற பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் நினைத்து புலம்பி வந்தவள், பள்ளிக்கு சென்றவள் மீண்டும் காலை 10 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

Eddapadi

பெற்றோர்களும் வேலைக்கு சென்றதால் தனிமையைப் பயன்படுத்தி, ‘என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம்... வேறு யாரும் காரணம் இல்லை. என்னால் ஆண்டுக்கு ஒரு முறையாவது தனது பெற்றோருக்கு செலவு ஏற்படுகிறது. தற்பொழுது அவர்களுக்கு என்னால் செலவுகள் இருக்காது. அதனால் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று எழுதி வைத்து விட்டு தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று விட்டு பிற்பகல் வீடு திரும்பிய தாய் வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்க்கும் போது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்த தனது மகளை பார்த்து அலறியதால் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களின் உதவியோடு மகளை இறக்கி பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்ததால் உடனடியாக பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

poolambatty-PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் திவ்யதர்ஷினி உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web