ப்ளீஸ்.. போலீசிடம் போகாதீங்க... உருக்கமாக கடிதம் எழுதி வைத்த திருடன்! மனமிறங்கிய கடை உரிமையாளர்!

 
திருடன்

கடைக்குள் திருடுவதற்காக புகுந்த திருடன் ஒருவன், ப்ளீஸ்.. தயவு செய்து போலீசிடம் செல்லாதீர்கள். நான் உங்கள் விருந்தாளி’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால், தான் போலீசிடம் புகார் அளிக்கப் போவதில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் புகுந்த திருடனின்  கடிதத்தைப் பார்த்து கடை உரிமையாளர் நெகிழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தில் பனியானா பகுதியில் வசித்து வருபவர் கோமாராம்.  பனியானா பகுதியில் ஜன சந்தடி அதிகமிருக்கும் பகுதியில் இவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 24ம் தேதி வழக்கம் போல கடையை திறக்க சென்றுள்ள கோமாராமுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடையைத் திறந்ததும், உள்ளே இருக்கும் இனிப்புகள் அனைத்தும் அங்குமிங்குமாக கீழே சிதறி கிடந்தது. யாரோ கடைக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த கோமாராம், கல்லாப் பெட்டியைப் பார்த்ததும், அதனுள் இருந்த பணம் களவு போனதைப் பார்த்து திருட்டு நடந்துள்ளதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். 

Robbery

கல்லா பெட்டிக்கருகில் திருடன் தன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரு பக்கத்தில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதத்தில்,  “ஹலோ சார், நான் நல்ல மனசு கொண்டவன். நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்ற தான் வந்தேன். நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. ஒரே பசியாக இருந்ததால், உங்கள் கடைக்கு சாப்பிடத் தான் வந்தேன். பணம் திருட வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் அறிகிறேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

எனது காலில் அடிபட்டுள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் கல்லாவில் இருந்த பணத்தையும் நான் எடுத்துக் கொண்டேன். நான் உங்கள் கடையில் அதிகமாக ஒன்றும் சாப்பிடவில்லை. நான்கு பீஸ் இனிப்புகளை தான் சாப்பிட்டேன். சேவ் கிடைக்கும் என்று தேடிப் பார்த்தேன். அது இல்லை. கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி.” என்று எழுதி வைத்துள்ளான்.

Police

இந்த கடிதம் விவகாரம் அக்கம் பக்கம் பரவிய நிலையில், சம்பவ இடத்திற்கு அப்பகுதியின் காவல்துறை ஆய்வாளர் அசோக் பெனிவால் வந்துள்ளார். ஆனால் கடித்ததைப் படித்து பார்த்த பின் கடையின் உரிமையாளர் கோமாராம் போலீசாரிடம் புகார் அளிக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். அவர் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் இனிப்புகள் திருடப்பட்டுள்ளன. உரிமையாளர் புகார் அளிக்காவிட்டாலும், அந்த திருடனைத் தாங்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web