விஷமாகும் உணவு!! 13 மாணவர்கள், 5 ஆசிரியர்களுக்கு வாந்தி, மயக்கம்!! பிரியாணி சாப்பிட்டதால் விபரீதம்!!

 
பிரியாணி

கேரளாவில் ஏற்கனவே பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் உயிரிழந்தவிவகாரம் விசாரணை இன்னும் முடியவில்லை. அதற்குள் அதே போல் மற்றொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதன்படி கேரளா பத்தனம்திட்டாவில்  கேரமல்  உணவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தனப்பள்ளியில் உள்ள ரோஸ் டேல் ரெசிடென்ஷியல் சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி விழா ஒன்று நடத்தப்பட்டது.

பிரியாணி

இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்காக சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. அந்த உணவை உட்கொண்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் , உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்  13 மாணவர்கள் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 5 ஆசிரியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பிரியாணி
இது குறித்து உணவகத்தில் விசாரிக்கப்பட்ட போது காலை 11 மணிக்கே  பள்ளிக்கு பிரியாணி கொண்டு வரப்பட்டது . ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை மாலையில் தான் மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளார்.  உணவு சரியாக சேமிக்கப்படாததால், அது பழுதடைந்திருக்கலாம் என உணவக உரிமையாளர் கூறினார்.கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் ஏற்கனவே கடந்த வாரத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் விஷமாகும் உணவு குறித்த பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதனையடுத்து அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு காலாவதியான உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web