விஷமாகும் உணவு!! பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!!

 
அருண்குமார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  தீர்த்தகிரி.இவருடைய  மகன் 24 வயது அருண்குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில்  பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார்.  இவர் நேற்று பிற்பகல் அருண்குமார் தனது அறையில் ஹோட்டலில் வாங்கிநண்பர்களுடன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார்.

பிரியாணி

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.  தொடர்ந்து  மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக நண்பர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, அதில் அருண்குமாரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போலீஸ்

ஆம்புலன்ஸில் செல்லும்போதே அருண்குமார் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி எடுத்ததால், இது ஃபுட் பாய்சனா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரியாணி சாப்பிட்டதும் இளைஞர்  உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web