கொட்டும் மழை.. சூறாவளி காற்றில் கணவரை தேடியலைந்த மனைவி! வைரலாகும் வீடியோ!
சென்னை அடுத்த உத்தண்டியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்மணி ஒருவர், கொட்டும் மழையிலும், சுழன்றடிக்கும் சூறாவளி காற்றிலும் கண்களில் கவலையும் கண்ணீருமாய் தன் கணவரைத் தேடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. மாமல்லபுரம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்த ‘மாண்டஸ்’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு சாய்ந்தன.
ஐயோ என் புருஷன் என்ன ஆனாருனு தெரியலயே... புயலில் கணவரை கண்ணீருடன் தேடிய மனைவி!!
— A1 (@Rukmang30340218) December 10, 2022
#TamilNadu #MandusCyclone #wife #ChennaiRains pic.twitter.com/YyRD43xuJU
இந்நிலையில் உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்ததால் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. கொட்டும் மழையில் பெண் ஒருவர் பரிதவிப்புடன் தனது கணவரைத் தேடிய படி அந்த பகுதியில் சுற்றியலைந்தார்.
கல்லூரி ஒன்றில் கூலி வேலைக்குச் சென்று விட்டு தற்போது தான் திரும்பியதாகவும், தனது வீட்டிற்குள் நீர் புகுந்த நிலையில் தனது கணவரைக் காணவில்லை என்று தேடிச் செல்வதாக தெரிவித்தார். கணவர் கிடைப்பார்... கவலைப்படாதீர்கள் என்று செய்தியாளர் அவரிடம் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்த தண்ணீரில் தவித்தபடியே கணவனை தேடிச் சென்றார்.
அந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இந்த தகவலை செய்தியாளர் தெரிவித்ததும், வேனுடன் குப்பத்துக்குள் சென்ற போலீசார், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் கொண்டு சேர்த்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!