நெகிழ்ச்சி!! 2 பேருக்கு வாழ்வளித்த ஒன்றரை வயது குழந்தை!!
நம் காலம் இந்த பூமியில் முடிந்த பிறகும் உடல் உறுப்புக்கள் தானத்தால் மேலும் உயிர் வாழ முடியும். இந்த விழிப்புணர்வு சமீபத்திய நாட்களில் அதிகரித்து வருகிறது. திடீர் விபத்துக்கள் காரணமாக மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொறுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வரும் தம்பதியினர் குழந்தைக்கு ஒன்றரை வயது தான்.
இந்த ஆண் குழந்தை கடந்த, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் டிவி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடியதில் திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில், அந்த குழந்தையின் உடல் உறுப்புக்களை தானம் அளிக்க அதன் பெற்றோர் முன் வந்தனர். அதன்படி இதயம் , கல்லீரல்,சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள 4 மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன. இந்த குழந்தை தான் இதுவரை மாநிலத்திலேயே உடல் உறுப்பு தானம் செய்த மிக குறைந்த வயதிலான குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டரை வயது குழந்தையே இதுவரை இளம் வயது கொடையாளராக இருந்து வந்தது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!