ஷ்ரத்தாவை தொடர்ந்து ரூபிகா!! மனைவியை 50 துண்டுகளாக்கிய கணவன் திடுக்கிடும் வாக்குமூலம்!!

 
ரூபிகா

தலைநகர் டெல்லியில் லிவிங் டுகெதரில் வாழ்ந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு வீசி சென்றான். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே போல் பல சம்பவங்கள் தொடர்ந்து  அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வந்தவர்  22 வயது ரூபிகா பகதின். இவர்  பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம்பெண்  28 வயது தில்தார் அன்சாரியை காதலித்து திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.  2 ஆண்டுகள் கடந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தில்தார் அன்சாரிக்கு, ரூபிகா 2வது மனைவி ஆவார்.

ரூபிகா

 சில நாட்களுக்கு முன்  தனது மனைவி மாயமானதாக தில்தார் அன்சாரி போரியோ போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வந்தனர்.  இந்த விசாரணையில் இளம்பெண்ணின் பெற்றோர்  தில்தார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.  இந்த நிலையில் போரியோ சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஒரு பெண்ணின் கால் மற்றும் உடலின் சில பாகங்கள் கிடந்தன. சில பாகங்களை நாய் ஒன்று கவ்வி சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற   போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கிடந்த 12 உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த பாகங்கள் இளம்பெண் ரூபிகாவுடையது என உறுதி செய்யப்பட்டது

ரூபிகா

உடனடியாக  தில்தார் அன்சாரி கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதில் அவர் தனது மனைவியை கொலை செய்து 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக கூறுபோட்டு வீசியதை ஒப்புக் கொண்டார்.  அத்துடன்  தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக தான் போலீசில் புகார் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.  போலீசார்  மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணியிலும் இறங்கினர். இதுவரை  18 பாகங்கள்  தான் கிடைத்துள்ளன. மரம் அறுக்கும் மின்சார எந்திரம் போன்ற கூர்மையான ஆயுதத்தால் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதே போல் சம்பவங்கள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web