ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் மர்ம மரணம்!! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு சோகம்!!
ரஷ்யாவில் வசித்துவரும் தொழிலதிபர்கள் விளாடிமிர் புதானோவ், பவெல் ஆன்டொனோவ் . இவர்கள் தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஒடிசாவில் நட்சத்திர விடுதியில் அறைகள் எடுத்து தங்கியிருந்தனர். கந்தமால் மாவட்டத்தில் உள்ள தரிங்பாடிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பிறகு அறைக்கு திரும்பி உள்ளனர். மறுநாள் காலை விளாடிமிர் புதானோவ் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பவெல் ஆன்டொனோவ் நேற்று முன்தினம் தங்கி இருந்த 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களின் ஒப்புதலுடன் பவெல் ஆன்டொனோவின் உடல் நேற்று எரியூட்டப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்து காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் 4 பேரும் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
மறுநாள் விளாடிமிர் புதானோவ் உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். இதில் அவரது நண்பரான பவெல் ஆனடொனோவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் அவர் டிசம்பர் 25ம் தேதி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் எனக் கூறியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!