சாரி மாமா... நான் உன் லைஃப் கிடையாது! சாகும் முன் கல்லூரி மாணவி கதறிய வீடியோ!

 
சரண்யா

தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை முதலாமாண்டு படித்து வரும் மாணவி சரண்யா, குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து தற்கொலைச் செய்து கொண்டது உறவினர்களை கதற வைத்துள்ள நிலையில், தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்,  கதறியபடியே சோகமாக தனது காதலனுக்கு சரண்யா அனுப்பியுள்ள வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவில் வசித்து வருபவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். இளைய மகள் சரண்யா (23 ), கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்த சரண்யாவை அவரது தாயார் கண்டித்ததால் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உடனடியாக சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சரண்யாவின் சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவி சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saranya

சரண்யா புதுப்பேட்டை அருகே உள்ள அன்சாகரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருண் சரண்யாவிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்து விட்டு சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் தனது சகோதரி கார்த்திகாவுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக கார்த்திகா அளித்த தகவலின் பேரில் அக்கம் பக்கத்தினர், சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  சரண்யா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து விட்டு, அதனைக் குடித்தபடியே தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது காதலனுக்கு அனுப்பி உள்ளார் என்பது  தெரிய வந்துள்ளது.

அதில், “சாரி மாமா நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன்னு நினைக்கிறேன். நான் கண்டிப்பா இனி வரமாட்டேன் அவ்வளவு தான் போய் சேர்ந்து விடுவேன். நல்லபடியா சந்தோஷமாக இரு மாமா. என் அம்மாவை பார்த்துக்கோ. நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பது உனக்கு புரிய வைத்தேன். உனக்கு புரியாமல் உன் பாட்டுக்கு பேசிட்ட.  நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நல்லபடியா சந்தோஷமாக இரு. நான் இனி மேல் உன் லைஃப் கிடையாது.  அவ்வளவு தான். நான் போய் சேர்ந்து.விடுவேன்” எனப் பேசி அந்த வீடியோவை  காதலனுக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நாட்றம்பள்ளி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web