பள்ளி மேலாண்மை குழு தலைவி தற்கொலை! பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுத்தும் பலனில்லை!

 
பியூலா

பள்ளிக் கல்வி துறையில் புகார் கொடுத்தும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பலனில்லாத நிலையில், பள்ளி மேலாண்மை குழு தலைவி தற்கொலைச் செய்து கொண்டது மாங்காடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வி துறை அதிகாரிகளும், காவல் துறையினரும், தற்கொலைக்குப் பின்னர், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கவும், விசாரிக்கவும் வீடு தேடி வந்தது உறவினர்களை கொந்தளிக்க செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கல்வி மாங்காட்டில் அரசு பள்ளி ஆசிரியை  தரக்குறைவாக திட்டி, சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் மனமுடைந்த பள்ளி மேலாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள மாங்காடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சவுபாக்கியம் (40) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் மாங்காடு, அப்பாவு நகரை சேர்ந்த பியூலா (35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.

இவர் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்து வந்தார். இந்நிலையில் ஆசிரியை சவுபாக்கியம், பியூலாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாங்காடு காவல் நிலையத்திலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் பியூலா புகார் கொடுத்தும் இதுவரையில் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

suicide

இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்த பியூலாவை ஆசிரியை சவுபாக்கியம் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பியூலா, வீட்டுக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்காடு போலீசார், பியூலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பியூலா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பள்ளிக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஆசிரியை சவுபாக்கியத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற மாங்காடு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியை சவுபாக்கியம் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை சவுபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் புகார் அளித்தனர்.

Mangadu-PS

புகாரின் பேரில் சவுபாக்கியத்திடம் மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பியூலா குறித்து ஆசிரியை சவுபாக்கியம் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்ததும், அவதூறான வார்த்தைகளில் பேசியதும் உறுதியானது. இதையடுத்து பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியை சவுபாக்கியத்தை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web