செம கெத்து.. புல்லட் ஓட்டிக் கொண்டே பீர் குடித்து ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த வாலிபர்! லாடம் கட்டிய போலீசார்!
கையில் பீர் பாட்டிலை லாவகமாக பிடித்து, குடித்துக் கொண்டே இன்னொரு கையால் புல்லட் வண்டியை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டியபடியே ரீல்ஸ் வீடியோ ஷூட் செய்து வெளியிட்ட இளைஞரை பிடித்து, உத்தரபிரதேச மாநில போலீசார் லாடம் கட்டினார்கள்.
இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களின் கனவு வாகனமாக புல்லட் இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், புல்லட்டில் லாங் ட்ரைவ் போவது பலரது கனவு தான். பைக் பிரியர்கள் பலர் சாலை விதிகள் மீறி சாகசங்கள் செய்து அதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேத்தில் புல்லட் வண்டியில் ரீல்ஸ் செய்த வாலிபர் போலீசிடம் சிக்கி உள்ளார்.ஆனால், அதற்கு ஒரு அளவு வேண்டாமா? ஏற்கெனவே விபத்துக்களால் நேரிடும் மரணம் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இப்படி சாகசம் செய்து, வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
बुलेट है कोई बात नहीं, सब रास्ता देंगे, लेकिन खुल्लेआम बियर पीते हुए.. बिना हेलमेट.. बुलेट चलाओगे तो!! रील बनाने के चक्कर में 31000 रुपए का चालान आ गया न.... अब झेलो.. महंगी पड़ी ये रील.. इतना तो एड भी नहीं मिल रहा होगा यू ट्यूब से भाई को.. pic.twitter.com/cSEUMsWGfx
— Vivek K. Tripathi (@meevkt) January 20, 2023
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் டெல்லி - மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து கொண்டு இருந்து உள்ளார். இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்து உள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் வந்தவர் வீடியோவாக எடுத்து உள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இது போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த நபரை தேடி பிடித்து, ரூ. 31 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான சலானை வழங்கி உள்ளனர்.
இதில், அந்த புல்லட் வண்டியானது அசலாத்பூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் குமாருக்கு உரியது என்பதும் வண்டியை ஓட்டியது நூர்பூரை சேர்ந்த சுரேந்திரா குமார் என்பவரின் மகன் அனுஜ் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதற்காகவும், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வண்டியை ஓட்டிய நபரை முசோரி போலீசார் கைது செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் மாஸ் காட்டும் ஆர்வத்தில் ரீல்ஸ் வீடியோ போட்ட அனுஜ் அதன் மூலமாகவே போலீசிடம் சிக்கியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க