சென்சார் கதவு.. சுற்றிலும் கேமிரா.. பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் 300 பவுன் கொள்ளை! போலீசார் விசாரணை!

 
வீடு பங்களா

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் பட்டபகலில்  சென்சார் போர்டை உடைத்து  300 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், பகலிலேயே கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பயத்தை உருவாக்கியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து, அதன் பின்னர் விருப்ப ஒய்வு பெற்றுள்ளார். நேதாஜி, அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டு குடும்பமாக திருவெறும்பூரில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமாக 6 கிரசர்கள், ரெடிமிக்ஸ் உள்ளதாகவும், தனியார் பேருந்துகள்  ஓடுவதாகவும், மேலும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காண்டிரக்ட் வேலைகளை எடுத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி

இந்நிலையில் நேற்று காலை தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் நேதாஜி வீட்டிற்குள் நுழைந்து சென்சார் கதவை உடைத்து வீட்டில் இருந்த 300 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டில் சென்சார் லைட் எரிவது நேதாஜியின் மகள் செல்போனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உடனடியாக வீட்டிற்கு ஆளை அனுப்பி பார்த்துள்ளனர். அப்பொழுது வீட்டின் சென்சார் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த 300 பவுன் நகை திருட்டுப் போய் உள்ளது தெரிய வந்தது. உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கொள்ளை திருச்சி போலீஸ்

இச்சம்பவம் குறித்து உடனடியாக கைரேகை பிரிவு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் அச்சுதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி  வரவழைக்கப்பட்டது. அது குற்றவாளிகளை மோப்பம் பிடித்து திருவெறும்பூர் கல்லணை சாலையில் ஓடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web