அதிர்ச்சி!! பெண் கிரிக்கெட் வீராங்கணை மர்ம மரணம்!!

 
ராஜஸ்ரீ ஸ்வைன்

இந்தியாவின் பிரபல பெண் கிரிக்கெட் வீராங்கனை  ராஜஸ்ரீ ஸ்வைன். இவர் ஜனவரி 11ம் தேதி காணாமல் போனதாக   அவரது பயிற்சியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டாக் அருகே அதாகர்  குருதிஜாதியா வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்ரீ ஸ்வைன்
ஆனால் இதுவரை  அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.  உடலில் காயங்கள் மற்றும் கண்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் அவரது இருசக்கர வாகனம் வனப்பகுதியில் கிடந்தது.  அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 
தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக  பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ உட்பட சுமார் 25 மகளிர் கிரிக்கெட் வீராங்கணைகள் கலந்து கொண்டனர். அதே பகுதியில் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 10ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் பட்டியலில் இடம் பெறவிவில்லை.

ராஜஸ்ரீ ஸ்வைன்

இதற்கு மறுநாள், ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக பயிற்சியாளரிடம் தெரிவித்திருந்தார். ராஜஸ்ரீயின் குடும்பத்தினர் பயிற்சியாளரை கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. பெண் வீராங்கனை மர்மமான முறையில் உயிரிழந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது உயிரிழப்பிற்கு சக வீரர்கள், வீராங்கணைகள், உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web