அதிர்ச்சி!! ” உன்னை மிஸ் பண்றேன்”!! 8 ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ”காதல் கடிதம்”!!

 
காதல்கடிதம்


மாதா, பிதா , குரு , தெய்வம் என்பது நமது பாரம்பர்யம். குருவுக்கு அடுத்து தான் தெய்வமே. ஆசிரியர்கள் நம் வாழ்வை செதுக்குவதிலும், வடிவமைப்பதிலும் அத்தனை முக்கிய பங்கு அவர்களுக்கு உண்டு. ஆனால் சமீபகாலமாக இந்த போக்கு சற்றே மாறி வருகிறது. ஆங்காங்கே சில ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களின் சுயலாபத்திற்காகவும், சௌகர்யத்திற்காகவும் பயன்படுத்த தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் மீதான மரியாதையை குறைக்க வைக்கிறது. 

கடிதம்
அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு சில கேவலமான ஆசிரியர்களால் மாணவிகளின் கல்வி மட்டுமல்ல அவர்களின் எதிர்கால வாழ்வும் வீணாகிவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதே போல் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. அதன்படி  உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜியில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவர்  8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார்.

போலீஸ்
அந்த கடிதத்தில் "நான் உன்னை நேசிக்கிறேன். விடுமுறை நாளில் உன்னை மிஸ் செய்கிறேன். நான் உன்னிடம் நிறைய பேச வேண்டும். பள்ளிக்கு அனைவருக்கும் முன் சீக்கிரமாக வந்தால், இருவரும் பேசி புரிந்து கொள்ளலாம்" என எழுதியுள்ளார்.  இதை மாணவி பெற்றோரிடம் கூறியதால்  பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரி சம்பவங்கள் படிக்கும் பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல். அத்துடன் அவர்களின் எதிர்காலமும் வீணாகி விடும் என்பதையும் ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web