அதிர்ச்சி!! எஜமானரை சுட்டு கொன்ற செல்ல நாய்!! தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!!

 
ஜோசப்

அமெரிக்காவில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலோர் தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பது வழக்கம். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அமெரிக்க அரசு இதனை அனுமதித்துள்ளது. இதனாலேயே பல நேரங்களில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தொடங்கி எதற்கெடுத்தாலும் துப்பாக்கிகளை தூக்கி சுடும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

 கனாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர்  30 வயது  ஜோசப் ஸ்மித். இவர் அமெரிக்காவில் பிளம்பராக  பணிபுரிந்து வருகிறார்.  அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. எனவே, கடந்த சனிக்கிழமை  ஜனவரி 21ம் தேதி  ஜோசப் தான் ஆசையாய் வளர்த்த நாயுடன் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.

நாய்

காரின் முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் சென்ற நிலையில், பின்னிருக்கையில் வளர்ப்பு நாய் இருந்துள்ளது. வேட்டைக்கான துப்பாக்கியும் நாய்க்கு அருகே பின் இருக்கையில் இருந்துள்ளது.இந்நிலையில், அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறி குதித்துள்ளது. அப்போது துப்பாக்கி சுட்டு குண்டு வெளியேறி முன் இருக்கையில் இருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது. இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். இது தெரியாமல் அந்த வளர்ப்பு நாய் அவரை சுற்றி, சுற்றி வந்துள்ளது.

Kansas police

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கன்சாஸ் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.2022-ம் ஆண்டில் மட்டும் 648 துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. துப்பாக்கிச்சூடு காரணமாக 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web