அதிர்ச்சி! திமுக முன்னாள் எம்.பி., மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்! உறவினரே கொலைச் செய்தது அம்பலம்!
திமுக முன்னாள் எம்.பி.,யும், சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளருமான டாக்டர் மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானாதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக டாக்டர் மஸ்தான், கழுத்தை நெரித்து அவரது உறவினரே கொலைச் செய்தது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டாக்டர் மஸ்தானின் மரணத்தை சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பெரும் பரபரப்பாக ,முதல் நாள் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்ற நிலையில், அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக மஸ்தான் காலமானதாக கூறப்பட்டது. சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த போலீசார், மஸ்தானின் உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தான், திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில செயலாளராக பணியாற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வீர வாளினைப் பரிசளித்திருந்தார்.
இந்நிலையில், டாக்டர் மஸ்தானை அவரது சகோதரரின் மருமகன் இம்ரான்தான் திட்டம் போட்டு கொலைச் செய்தது அம்பலமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 22ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற மஸ்தானை, கூடுவாஞ்சேரி அருகே முகத்தை பொத்தி கொலைச் செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உருது மொழி பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை திமுகவுக்கு சாதகமாக்கியதில் டாக்டர் மஸ்தானின் பங்கு பெரிது. திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க அசாதுதீன் ஒவைசிக்கு டாக்டர் மஸ்தான் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!