அதிர்ச்சி! பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியரைத் தாக்கி விட்டு, மாணவி கடத்தல்!
பட்டப்பகலில், தனியார் பள்ளிக்குள் நுழைந்து, வகுப்பறையில் இருந்த ஆசிரியரைத் தாக்கி விட்டு, மாணவியை இருவர் கடத்திச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், மூன்று தினங்களாக போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து, போராடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சாமிகுளம் பகுதியில் வசித்து வருபவர் யாஸ்மீன். இவரது தங்கை பர்வீன் பானு உயிரிழந்தார். இதனால் அவரது 8 வயது மகள் நபியாவை யாஸ்மீனே வளர்த்து வந்துள்ளார். சிறுமி நபியா, கருங்கட்டான் குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நபியாவை, பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தேனி ஓடை தெருவை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் பார்த்திபன் என இருவரும் சேர்ந்து, பட்டபகலில் ஆசிரியரை தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காட்சியில் பள்ளி வகுப்பறைக்குள் நுழையும் இருவரையும் ஆசிரியர்கள் தடுக்கின்றனர்.
ஆசிரியர்களை சராமாரியாக தாக்கி விட்டு, இருவரும் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலீசார் மாணவியை கடத்திச் சென்றவர்கள் மீது மூன்று நாட்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் அலட்சியப்போக்கு பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!