அதிர்ச்சி! சென்னையில் ஐடி ஊரியர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

 
ஷியாம்

சென்னையில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலைப் பார்த்து வந்த ஷியாம் சுந்தர், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், நிறுவனத்தின் 7வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம், பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் பொறியாளராக வேலைப் பார்த்து வந்தவர் போரூரில் வசித்து வந்த ஷியாம் சுந்தர்(48). இந்நிலையில் நிறுவனத்தின் இரவு ஷிப்ட்டில் வேலைப் பார்த்து வந்த ஷ்யாம் சுந்தர் திடீரென  நிறுவனத்தின் 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

jump

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Thuraipakkam-PS

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் பணிசுமை காரணமாக சாப்ட்வேர் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web