அதிர்ச்சி! கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை!

 
கிரிஸ்

சென்னையை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலையில், தனியார் பொறியியல் கல்லூரியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓம் கிரிஸ் என்பவர் பி.டெக் பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவன் கல்லூரியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Jump

திடீரென கல்லூரியின் 6வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் கீழே குதித்ததைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்தப்படியே உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இநத் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Chennai

வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவன் திடீரென 6வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கல்லூரி நிர்வாகமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது கவலையளிக்கிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web