அதிர்ச்சி வீடியோ!! மொபைல் திருட்டு!! ஓடும் ரயிலில் இருந்து திருடன் கீழே தள்ளி கொலை!!

 
ரயிலில் தள்ளி கொலை

சமீபகாலமாக இந்தியாவின் வட பகுதிகளில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மத்திய  , மாநில அரசுகள் இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இருந்த போதிலும் வன்முறை சம்பவங்கள் பெருகி வருகின்றன. தலைநகர் டெல்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு  இளைஞர்  பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார்.

ரயிலில் கொலை

சிறிது நேரத்தில் தனது மொபைல் காணாமல் போனதை உணர்ந்த அந்தப் பெண் கூறியதன் பேரில் தேடத் தொடங்கினர்.  ஒரு இளைஞரிடம் அந்த மொபைல் இருந்ததையடுத்து, அங்கிருந்த பயணிகள்இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று அவர் கதறக், கதற ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில், தில்கார் ரயில் நிலையம் அருகே, ரயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதிவிட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.


இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இளைஞரை ரயிலிலிருந்து தள்ளிய நரேந்திர துபேவை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.  இளைஞரை ஆத்திரத்தில் அடித்து உதைப்பதும், அந்த இளைஞர் தன்னை மன்னித்து விட்டு விடும்படி  கெஞ்சிக் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி  பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவின் அடிப்படையில் குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web