குடை எடுத்திட்டு போங்க!! இன்று 8 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை!!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் , காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. டிசம்பர் 5ம் தேதி நாளை மறுநாள் குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சாதகமான நிலை நிலவி வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யலாம்.
டிசம்பர் 5 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் மிகக்கன மழை பெய்யலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அத்துடன் டிசம்பர் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!