கண்ணீர் வீடியோ!! எங்கள வாழ விடுங்க!!கதறித் துடிக்கும் அமைச்சர் சேகர்பாபு மகள்!!

 
ஜெயகல்யாணி

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவரது மகள் ஜெயகல்யாணி. இவர் சென்னை ஓட்டேரியில் வசித்து வரும் சதீஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். 
இது குறித்து ஜெயகல்யாணி விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் பெங்களூர் காவல்துறையிடம் சரணடைந்தார்.  ருவருக்கும் திருமணமாகி சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஜெயகல்யாணி தனது உயிருக்கு தனது தந்தை சேகர்பாபுவால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் தான் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களீள் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கும் ஜெயகல்யாணி நானும் எனது வீட்டின் அருகில் இருக்கும் சதீஷ்குமாரும்  கடந்த 7 வருடங்களாக காதலித்தோம். 2021ல் இது வீட்டிற்கு தெரிந்து என்னை அமெரிக்கா அனுப்பி வைத்து விட்டனர்.ஏப்ரலில் நாடு திரும்பி அதன்பிறகு சதீஷ்குமாருடன் பேசி ஆகஸ்ட்டில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் புனேயில் காவல்துறையினர் பிடித்து தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் .சென்னை திரும்பிய பிறகு எனது கணவரை 2 மாதங்களாக போலீஸ் கஸ்ட்டியில் வைத்திருந்தனர். அதன்பிறகு ஆட்கொணர்வு மனு மூலம்  அவரை வெளியில் கொண்டு வந்தேன். அதற்கு பின் பல  வேலைகளை எங்கள் தந்தை செய்துள்ளார். அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. 2022 மார்ச்சில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது  நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கணவர் மீது நிறைய பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

சேகர்பாபு மகள் ஜெயக்கல்யாணி

அப்பாவுடன் இருப்பவர் தான்  இந்த புகாரை கொடுத்துள்ளார். இந்த 10 மாதங்களில் எனது கணவரின் குடும்பத்தினர் அத்தனை பேரையும் டார்ச்சர் செய்கின்றனர். இந்த அனைத்து வழங்குகளையும் நாங்கள் நேரடியாக தமிழகத்திற்கு வந்து சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில்  சென்னை வந்தால் தமிழக போலீஸ் எனது கணவரை எதாவது செய்துவிடுவார்கள் என்ற பயம் இருந்து கொண்டே உள்ளது.  தமிழகத்தில் தற்போது ட்ரெண்டாக இருக்கும் லாக்கப் டெத் போல் என் கணவரின் கதையை முடித்து விடலாம் என்ற பயம் உள்ளது. எனக்கோ எனது கணவருக்கோ என் குழந்தைக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு முழு காரணம் எனது அப்பா அமைச்சர் சேகர் பாபுதான்.

தமிழகத்தில் என் அப்பா முதல்வருடன்  நெருக்கமாக இருப்பதால், எல்லா போலீசும் அவருக்கே உதவி செய்கிறார்கள். இதுவரை முதல்வர், கவர்னர், ஜனாதிபதி என அனைவரையும் சந்தித்து விட்டோம். எதுவும் நடக்கவில்லை. முதல்வர் இதையெல்லாம் அமைதியாக ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்? அல்லது எதுவுமே அவருக்கு தெரியாதா? என தெரியவில்லை. நான் கர்ப்பமாக இருக்கும்போது இவ்வளவு பிரச்சினையையும் சந்தித்து வருகிறேன்.  சட்டப்பூர்வமாக அனைத்து வழக்குகளையும் சந்திக்க தயார். யாரிடம் உதவி கேட்டாலும் செய்ய மறுக்கிறார்கள். இதில் முதவல்வர்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web