திருச்சியில் இளம்பெண் தற்கொலை! போலீசில் பெற்றோர் புகார்!
திருச்சி, திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் பத்மப்ரியா. இவர் நடத்தி வந்த தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பத்மபிரியா(36). இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார்.
பத்மப்ரியா நடத்தி வந்த தையல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாருக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தவுடன், கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பத்மப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பத்மபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்மப்ரியாவின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!