பயங்கரம்!! நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்!! 40 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்!!

 
விபத்து

நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் கப்ரினி என்ற நகரில் நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

விபத்து

இந்த சம்பவத்தை 3 நாள் தேசிய துக்கமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்த கோரப் விபத்து குறித்து அந்நாட்டுஅதிபர் மெக்கே சால்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கோர விபத்தில் பல இளம் உயிர்களை நாம் இழந்து விட்டோம். நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும். அதில் நாட்டின் போக்குவரத்து செயல்பாடுகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

விபத்து
இது குறித்து முதல்கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்தில் மோதியுள்ளது. இதுவே விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்டவர்களில் பலர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டில் உள்ள மோசமான சாலைகள், பாதுகாப்பு குறைவான பொது போக்குவரத்து வாகனங்களே இது போன்ற தொடர் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web