பயங்கர விபத்து! அடுத்தடுத்து மோதிய அரசு பேருந்து தீப்பற்றி எரிந்தது! 2 பேர் உடல் கருகி பலி! அதிர்ச்சி வீடியோ!

 
பேருந்து விபத்து

தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து ஒன்று, நிலைதடுமாறி அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதியதில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் உடல் கருகி 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ராஜ்குரு நகரில் இருந்து புனே நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. பேருந்து, சின்னார் நெடுஞ்சாலையில் பால்சே கிராமம் அருகே ஷிண்டே சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தில் பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. எவ்வளவோ முயற்சித்தும், பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அலைபாய துவங்கியது. இந்நிலையில், முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. இந்நிலையில், இரண்டு பேருந்துகளுக்கும் இடையே நின்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களும் இந்த விபத்தில் பேருந்துகளுக்கிடையே சிக்கி நொறுங்கின.


அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதிய அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த 43 பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். பலரும், பேருந்தின் ஜன்னல் வழியாக  கீழே குதித்து உயிர் பிழைத்தனர். மேலும் பலரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இருப்பினும் தீ விபத்தில் 3 பேர் சிக்கி தவித்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், தீ விபத்தில் காயமடைந்த 3 பேரை மீட்டு நாசிக் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிய மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி போராடி பேருந்தில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் தீயில் அரசு பேருந்து எரிந்து நாசமானது.

Mumbai

மேலும் அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 வாகனங்கள் சேதமடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி நாசிக் - அவுரங்காபாத் சாலையில் பேருந்தும், லாரியும் மோதிய சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web