நாளை மறுதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் உத்தரவு!
நாளை மறுதினம் டிசம்பர் 24ம் சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் மக்கள் சிறப்பாக கொண்டாடவும், பக்தர்கள் அதிகளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்படாமல் களையிழந்து இருந்தன. மக்கள் தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தல், அலங்கார விளக்குகள், வாசல்களில் மின்னும் நட்சத்திரங்கள் என்று வீடுகள் களை கட்டியுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 11ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!