வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!! இளைஞரிடம் மொபைலை வழிப்பறி செய்த போலீஸ்காரர் கைது!!

 
போலீஸ்

திருச்சியில், டூ–வீலரில் சென்ற வாலிபரிடம் மொபைல் போன்களை பறித்துச் சென்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.திருச்சி, அரியமங்கலம் அருகே, காமராஜ் நகரை சேர்ந்தவர் ரியாசின்,18. டூ–வீலர் மெக்கானிக்கான அவர், நேற்று, உறவினர்கள் மூன்று பேருடன் ஒரு பைக்கில், புதிய வெங்காய மண்டி சாலையில் சென்றுள்ளார். 

குற்றவாளி
அப்போது, அவர்களை வழி மறித்த ஒருவர், போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, லைசென்ஸ், ஆர்.சி., போன்றவற்றை கேட்டுள்ளார். தொடர்ந்து, ரியாசின் மற்றும் அவரது உறவினர்கள்  வைத்திருந்த மொபைல் போன்களை பறித்த அவர், ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார். ரியாசின், காந்திமார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விபரத்தை சொல்லி விசாரித்த போது, அந்த ஸ்டேஷனை சேர்ந்த யாரும் இல்லை என்பதும், திருவெறும்பூர் ஸ்டேஷனில் போலீஸ்காரராக இருக்கும் மணிவேல்,39, என்பவர் மொபைல் போன்களை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது

போலீஸ்

.கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்த அவர் மீது அடிதடி வழக்கு போன்றவை நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்கு பதிந்து, போலீஸ்காரர் மணிவேலை கைது செய்தார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web