லாரி ஓட்டுநரின் வெறிச்செயல்.. சுத்தியலால் அடித்து திருநங்கை கொலை!
லாரி ஓட்டுநர், திருநங்கையை சுத்தியலால் அடித்து, கீழே தள்ளி விட்டு தப்பி சென்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி திருநங்கை பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரபு (35). திருநங்கையான இவர் நேற்று அதிகாலை பாளை ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பிரபு கூறியதாவது, “நான் திருநங்கையாக மாறி யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று அங்கு வரும் வாகனங்களில் பணம் வசூல் செய்வேன்.
கடந்த 16ம் தேதி டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த போது லாரியில் வந்த 2 பேர் என்னை அழைத்தனர். நான் லாரியில் ஏறி இறங்கும் போது ரூபாய் 11 ஆயிரத்தை காணவில்லை. பணத்தை எடுத்தால் கொடுத்து விடு என்று அவர்கள் என்னை மிரட்டி தாக்கினார்கள்.
மேலும், நான் சத்தம் போட்டதால் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டியார் பட்டி மலையில் வைத்து வண்டியில் உள்ள சுத்தியலால் என் நெற்றியில் அடித்து ஊமைக் காயம் ஏற்படுத்தி, என்னை இறக்கி விட்டு சென்று விட்டனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென பிரபுவின் பிரபுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து லாரியில் வந்த இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!