வேலையில்லாதவர்களின் அதிகாரம்!! நடிகர் சித்தார்த் சர்ச்சை பதிவு!!

 
தடுப்பூசி எங்கடா டேய்! நடிகர் சித்தார்த் ட்வீட் !!

தமிழ் திரையுலகில் 2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதன்பிறகு ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு  போன்ற  படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் . இவர் தமிழ்  தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

சித்தார்த்
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  குற்றச்சாட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள்  பரிசோதனை செய்தனர். அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டனர். அதற்கு தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என சிஐஎஸ் எப் வீரர்கள்  வற்புறுத்தினர். ஆளே இல்லாத  மதுரை விமான நிலையத்தில் 20  நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்தனர் என குற்றம் சாட்டியுள்ளார். 

ஜனவரி 8 முதல் மதுரை – சார்ஜா விமான சேவை தொடக்கம்!
என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்கள் வரை எடுக்க சொன்னார்கள்.  ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு கடுமையாக நடந்துக்கொண்டனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனக் கூறினர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என  கடுமையான சாடியுள்ளார்.  இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் நிலையில், அதன் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web