சொத்துக்காக மாமனாரையே சுட்டுக் கொலை செய்த மருமகன்!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து தகராறில் மாமனாரை மருமகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கந்தர்வகோட்டை அருகே வடுகப்பட்டியில் வசித்து வருபவர் சைவராஜ். இவரது மருமகன் ரவிச்சந்திரன்.
இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்தவர். தற்போது வடுகபட்டியில் வசித்து வருகிறார். இதில் கடந்த சில மாதங்களாகவே மாமனருக்கும் மருமகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. சின்ன, சின்ன சண்டையாக இருந்து வந்த இந்த தகராறு நாளடைவில் பெரிதானது.
ஆத்திரத்தில் மருமகன் ரவிச்சந்திரன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மாமனாரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!