கணவனை 22 துண்டுகளாக வெட்டி வீசியெறிந்த மனைவி!! தொடரும் பயங்கரங்கள்!!

 
பூனம்


தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தாவை அவளது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை நாய்களுக்கு வீசினான். இந்த கொடூர சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில்  5 துண்டுகளாக்கிய சம்பவமும் நடந்தேறியது. தற்போது அதே பாணியில் தலைநகரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.அதன்படி  கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகனுடன் சேர்ந்து கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார். டெல்லியில் பாண்டவ நகர் பகுதியில் வசித்து வருபவர்  அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுடைய மகன்  தீபக் . இதில்  அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது.

ஷ்ரத்தா அப்தாப்

இதனை அவரது மனைவி  பூனம் பலமுறை சொல்லியும்,கண்டித்தும் அவர் திருந்தவில்லை.  இதனால் பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார். கடந்த ஜூன் மாதத்தில் கணவரை கொலை செய்து மகன் உதவியுடன் அவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து தினமும் டெல்லியை சுற்றி பிரித்து வீசியுள்ளார்.  வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி  கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.

போலீஸ்

அவருடன் அவரது தாயாரும் செல்வது அதில் தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை  சிதைந்த நிலையில் கண்டுபிடித்தனர். தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது  கண்டுபிடிக்கப்பட்டவைகளில் சில  தாசின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு து பூனம், தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web