தாய்க்கு மறுமணம் செய்து அழகு பார்த்த இளைஞர்!! குவியும் பாராட்டுக்கள்!!

 
யுவராஜ் சீலே

பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். என்னதான் தொழில் நுப்டம், நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் இன்றளவிலும் கணவன் இறந்து விட்டால் பெண்ணுக்கு வாழ்க்கை அவ்வளவு தான். ஆனால்  மனைவி இறந்துவிட்டால் மறுநாளே கணவன் புதுமாப்பிள்ளை என்ற நிலை தான் இன்றளவும் நிலவி வருகிறது. அப்படியே பெண்கள் மறுமணம் என்ற பேச்செடுத்தாலும் சுற்றியிருக்கும் உறவினர்களும், நண்பர்களும் அதை ஆதரிப்பதில்லை.

குழந்தை திருமணம்

ஆனால் இளம் வயதில் கணவனை இழந்த தாய்க்கு மறுமணம் செய்து அழகுபார்த்த இளைஞரும் வாழ்ந்து வருவது தான் ஆச்சரியமான செயல். அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா  கோகல்பூர் பகுதியில்  வசித்து வருபவர் 23 வயது யுவராஜ் சீலே . இவர்  18வது வயதில் இவரது தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இதனால், அவரின் தாயார் ரத்னா மிகுந்த கவலையுடனே நாட்களை நகர்த்தி வந்தார். 

 

கணவரைப் பிரிந்த துயரால் தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை அறிந்தார். மேலும், உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்துள்ளார். கோகல்பூர் போன்ற கிராமப்புற பகுதிகளில் கணவரை இந்த பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து யுவராஜ் அவ்வபோது எதிர்ப்பு தெரிவிப்பராக இருந்துள்ளார். 

5வது திருமணம்

இந்நிலையில், தாயின் தனிமையை புரிந்துகொண்ட யுவராஜ், 45 வயதாகும் தனது தாயிக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மூன்று ஆண்டுகளாக தனது தாயிடம் பேசி ஒப்புக்கொள்ளச் செய்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் உதவியுடன் அம்மா ஏற்ற மாப்பிள்ளையை தேடும் பணியில் ஈடுபட்டார். அதன் விளைவாக மாருதி கன்வந்த் என்பவரை தாயிக்கு துணையாக தேர்வு செய்து, திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இதற்காக உறவினர்களிடம் பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்துள்ளார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர் தனது தாயிக்கு மறுமணம் செய்து வைத்து உண்மையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.இன்று என் தாயிக்கு திருமணம். இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். என் தாயிக்கு ஏற்ற துணையை நான் தேடிக் கண்டறிந்துள்ளேன் என நெகிழ்ச்சியுடன் யுவராஜ் கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web