சோறு போட வழியில்லையே!! 2 வயது மகளை கொலை செய்த தந்தை!! கதறித் துடித்த தாய்!!
கர்நாடகா பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் அதிகம். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த ஐடி ஊழியரான ராகுல் மனைவி மற்றும் 2 வயது மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இவரை திடீரென 6 மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதே நேரத்தில் நிலைமையை சமாளிக்க வழி தெரியாமல் அதிர்ஷ்டத்தை நம்பி பிட்காயினில் இருந்த கொஞ்சநஞ்ச பணத்தை முதலீடு செய்தார்.
அத்துடன் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி அடமானம் வைத்தார். தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே பணமின்றி தவித்த ராகுல், தனது மகளுடன் காரில் வெளியே சென்றார். அவரையும் மகளையும் காணாததால் வீடு திரும்பவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கோலாக் அருகே கெந்தட்டி கிராமத்தில் உள்ள ஏரியில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த கார் ராகுலுடையது என்பதை உறுதி செய்தனர். அவரை தேடிப் பிடித்து விசாரணை செய்ததில் அவருடன் வந்த குழந்தை பசியால் அலறி துடித்தது.
அதன் பசியாற்ற அவரிடம் சல்லிக்காசு கூட கையில் இல்லை. இதனால் ஆத்திரத்தில் குழந்தையை கொலை செய்ததாக கூறினார். அதன் பிறகு ஏரியில் தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இதனைக் கண்டு கதறி துடித்த தாயின் கோலம் காண்பவர்கள் மனதை கரையவைத்தது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!