இன்றே கடைசி!! வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்!!
இந்தியா முழுவதும் நவம்பர் 9ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக நவம்பர் 12, 13, 26, 27 தேதிகளில் வாக்குச்சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் இவைகளுக்காக டிசம்பர் 1ம் தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் இன்று டிசம்பர் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் மனு அளிக்கலாம். அவை உடனுக்குடன் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இதனை தயாரிக்க தேர்தல் அலுவலர்களுக்கு ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் படி தயாராகும் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!