சோகம்!! திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 32 பேர் உயிரிழப்பு!! 50க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்!!

 
சிலிண்டர் விபத்து

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பது பழமொழி. ஆனால் இன்றைய அவசர யுகத்தில் திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன.இந்த கேலிக்கூத்துக்கள் பல நேரங்களில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இதே போல் ஒரு சம்பவம்  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற திருமண நிகழ்வில்  சிலிண்டர் வெடித்து  விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலர் பலியாகினர் . 

சிலிண்டர் விபத்து


அங்கிருந்து வரும் தகவல்களின்படி இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக  அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் நிலைமை கவலைக்கிடமாகி வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது

சிலிண்டர் விபத்து

. இந்த கோர விபத்து குறித்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் விடுத்த செய்திக்குறிப்பில் , ‘ இந்த கொடூரமான சம்பவத்திற்கு மத்தியில் நேற்று காங்கிரஸார் ஒற்றுமை யாத்திரையை கொண்டாடி வருவது மிகப்பெரிய குற்றம் ஆகும். இந்த விபத்தில்  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எரிவாயு நிறுவனத்தில் இருந்து தலா  கோடி ரூபாய் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web