திருநங்கை சுத்தியலால் அடித்துக் கொலை!! பகீர் வாக்குமூலம்!!

 
பிரபு

திருநெல்வேலி  மாவட்டம் பேட்டை அடுத்த சுத்தமல்லி பகுதியில் வசித்து வருபவர்  குமார். இவரது மகன் 35 வயது  பிரபு.  திருநங்கையான இவர்  அதிகாலை பாளை ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் இவரை நெல்லை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பெருமாள்புரம்

அதில் பிரபு  அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி , “நான் திருநங்கையாக மாறி யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று அங்கு வரும் வாகனங்களில் பணம் வசூல் செய்து பிழைப்பை ஓட்டி வருகிறேன். டிசம்பர் 16ம் தேதி அதே போல் பணம் வசூலித்து கொண்டிருந்தபோது  லாரியில் வந்த 2 பேர் என்னை அழைத்தனர். நான் லாரியில் ஏறி இறங்கும்போது ரூபாய் 11000ஐ காணவில்லை.

போலீஸ்

பணத்தை  எடுத்தால் கொடுத்து விடு என என்னை மிரட்டினர்.  நான் சத்தம் போட்டதால் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டியார் பட்டி மலையில் வைத்து வண்டியில் உள்ள சுத்தியலால் என் நெற்றியில் அடித்துவிட்டு  கீழே இறக்கிவிட்டு சென்று விட்டனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது” என  தெரிவித்துள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மாலையில் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து லாரியில் வந்த இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web