வரலாறு காணாத விலையேற்றம்! பொதுமக்கள் அதிர்ச்சி!

 
அத்தியாவசிய பொருட்கள் விலை

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் என்று நினைத்திருப்பார்கள் போல. ஏற்கெனவே கடந்த இரு வருடங்களாக கொரோனா ஊரடங்கு என்று பயந்து, நடுங்கி வாழ்வாதாரத்தை இழந்து மெல்ல தத்தளித்த எழுந்த மிஸ்டர் பொதுஜனம் விழி பிதுங்கி நிற்கிறார்கள். தீப்பெட்டியில் துவங்கி பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் சிலிண்டர், பால், பேப்பர் என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் போது, வரலாறு காணாத அளவில் சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

சென்னை கோயம்பேடு பகுதியில் உணவு தானிய வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்கள், ஊட்டி, தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம், மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற மளிகை பொருட்கள் தினமும் வருகின்றன. 

Koyambedu

இந்த நிலையில், ஜிஎஸ்டி உயர்வால், மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.350-க்கும், தனியா ரூ.250-க்கும், மிளகு ரூ.550-க்கும், ஏலக்காய் ரூ.1,200-க்கும், லவங்கம் ரூ.750-க்கும், அண்ணாச்சி பூ ரூ.900-க்கும், முந்திரி ரூ.650-க்கும், பட்டை ரூ.300-க்கும், துவரம் பருப்பு ரூ.125-க்கும், சிறுபருப்பு ரூ.100-க்கும், கடலை பருப்பு ரூ.70-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.120-க்கும், கடுகு ரூ.80-க்கும், சீரகம் ரூ.280-க்கும், சோம்பு ரூ.150-க்கும், வெந்தயம் ரூ.100-க்கும், திராட்சை ரூ.250-க்கும் நெய் ரூ.230-க்கும் டால்டா ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Grains

இது குறித்து, கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய வியாபாரி ஒருவர் கூறுகையில், “கோயம்பேடு உணவுதானிய மார்க்கெட்டில் கடந்த இரண்டு மாதமாக மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்தால், மறுபடியும் மளிகை பொருட்கள் விலை குறையும்.” என கூறினார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web